ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கூழாங்கல் ! நயன்தாரா Queen of Kollywood! வசூல் ஹீரோக்கள் வெறும் குப்பைகள்தான் .

May be a closeup of 1 person and standing
May be an image of 1 person and text
May be an image of 1 person, standing and text

Singara Velan : தமிழ், தெலுங்கில் ஹீரோக்களை தாண்டி ஹீரோயின்களால் எதுவுமே செய்ய முடியாது. ஏதாவது எதிர்த்து பேசிவிட்டால் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகள் போய்விடும். இன்று இதையெல்லாம் உடைத்தவர் என்று நடிகை நயன்தாராவை சொல்லலாம்.
Lyca, விஜய், முருகதாஸ் உருவாக்கிய படம் கத்தி. இதில் மீஞ்சூர் கோபியின் கதைக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் இயக்குனர் முருகதாஸால் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். கோபிக்கு உதவவே நிறைய பேர் பயந்தனர். ஏனென்றால் கத்தி படத்தில் இருப்பவர்கள் எல்லாருமே பெரிய ஆட்கள். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோபிக்கு ஆதரவு தந்தவர் நயன்தாரா. கோபியையே இயக்குனராக்கி நயன்தாராவே அந்த படத்தில் நடித்தார். அறம் என்கிற படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது.
நயன்தாரா இதோடு நிற்காமல் தொடர்ந்து நிறைய இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை தந்தார். இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் என்கிற படம் Best International Film என்கிற பிரிவில் அகாடமி விருதை வெல்லும் அளவுக்கு சென்றிருக்கிறது கூழாங்கல். மேலும் இப்படம் Cannes, Venice, Berlin போன்ற மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் கலந்துக் கொள்ளவில்லை என்றாலும் இதற்கு அடுத்த நிலையில் உள்ள விழாக்களில் கலந்துக்கொண்டு நிறைய விருதுகளை வென்றிருக்கிறது இப்படம். இயக்குனர் வினோத் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்

இதற்கு முன்பு Super Good Films, ஷங்கரின் S Pictures போன்றவை நிறைய உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அளித்திருக்கிறது. ஆனால் ஹீரோக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு நடிகை இதை செய்திருப்பது தான் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அந்த வகையில் நயன்தாராவை Queen of Kollywood என்று கூட சொல்லலாம்.

கருத்துகள் இல்லை: