வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி? திராவிடம் அறிந்து கொள்ளுங்கள்

 Arul Selvam  ·    குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....
அது 1972-ம் வருடம்..கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சரான காலம்..
அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்...
அரசு வேலைக்கு,    TNPSC ரெக்ரூட்மன்ட் என
ஒன்றிருப்பது கூட OBC,BC,SC மாணவர்கள் அறியாத காலமது...
ஒரு பொதுப்பணித்துறை டிவிஷனல் அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்,
அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்..டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன், ஹெட்கிளார்க் ராமானுஜன், கிளார்க் பரந்தாமன்
இப்படிப்போகும் லிஸ்ட்..

கடை நிலை ஊழியர் என்னும் பியூன் ஒரு தங்கராசாகவோ செல்வராசாகவோ இருப்பதுவே பெரிய விஷயம்..
பொ.ப.து விலேயே இந்த நிலை என்றால் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வருவாய்த்துறை ஏனைய பத்திரப்பதிவு, கல்வித்துறை வாகனப்போக்குவரத்து (RTO), வணிகவரித்துறை
இவைகளைப்பற்றி சொல்லத்தேவையில்லை...


கல்வி பின்புலமில்லாத குடும்பங்களிலிருந்து
புதிதாக பட்டப்படிப்பு முடித்து வரும் OBC,BC,SC கிராமப்புற மாணவர்ளுக்கு போதிய வழிகாட்டுதலோ, பயிற்சியோ இல்லாத காரணத்தால்
இந்த அரசு பணிகளுக்கான TNPSC நடத்தும் போட்டித்தேர்வில் வென்று உத்தியோகத்தை
பிடிப்பது குதிரைக்கொம்பான விஷயம்..
இதனை மனதில் கொண்டு
1972 -ம் வருடம்,
படித்து முடித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு இளைஞரணி (Youth corps) என்னும் ஒரு திட்டத்தை கலைஞர் அறிவிக்கிறார்...
அதன் வழி மாதம் 175 ரூபாய் உதவித்தொகை நிர்ணயிக்கப்பட்டு,
மாவட்ட ஆட்சியரால் OBC,BC,SC
பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோரப்பட்டு,
மெரிட் மற்றும் சமூக நீதி அடிப்படையில் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு,
அந்தந்த மாவட்டத்தில் உள்ள
அரசு அலுவலகங்களில்
கௌரவ உதவியாளரராக நியமிக்கப்பட்டனர்...
அதோடு நின்றிருந்தால்
கலைஞர் மற்ற தலைவர்களிலிருந்து வேறுபட்டு சரித்திரம்
போற்றும் தலைவராகி இருக்கமாட்டார்...
இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டதாரி இளைஞரணியினர்
அந்தந்த வருட TNPSC போட்டித்தேர்வில் கலந்து கொள்ள, அவர்களுக்கு முன்கூட்டிய அனுபவம் மற்றும் உத்தியோகத்திற்கென
தனி மதிப்பெண்கள் வழங்கி
அவர்கள் அனைவரும் TNPSC-யால்
தேர்ந்தெடுக்கப்பட்டு
அனைத்து அரசு அலுவலகங்களிலும்
Group iv, Group ii, Group i என அனைத்துப்பதவிகளிலும் அமர வைக்கப்பட்டனர்..
அதிலிருந்து உடைந்ததுதான் அவாக்களின் அரசு அலுவலக டாமினேஷனும் மேதாவித்தனமும்...
அதன் பின்னரே குப்பனும் சுப்பனும் கோவிந்தனும் அரசு அதிகாரியானது...
கலைஞரை விமர்சிக்கும் இக்கால அரைவேக்காடுகளுக்கு,
நலிந்த சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கான
அவரின் தொலைநோக்குப் பார்வையும்,
சமூக நீதி அக்கறையும் புரிய வாய்ப்பில்லை...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இல்லை, ஊரை அடித்து, உழைக்காமல் உண்டு கொழுத்த பா...ப்...ன பன்னாடைகளை திரும்பி பார்க்காமல் ஓட விட்ட தீ !

பலன் மற்றும் பயனறியாது உழைத்த மக்களின் உரிமையை மீட்டெடுத்த உண்மை இயக்கம்