செவ்வாய், 18 மே, 2021

கொரோனா தடுப்பூசி தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

 மாலைமலர் :சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கொரோனா மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உருவாக்கலாம்.
* ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே  உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு  தீர்வாக தமிழ்நாட்டில் லேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும்.
* மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும்.
* உற்பத்தி நிறுவனங்களுக்கு  தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும்.
* குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும்.
* ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: