செவ்வாய், 18 மே, 2021

கொரோனா பாதித்தவர்களின் குழந்தைகளைப் பாதுகாக்க மையம்!

கொரோனா பாதித்தவர்களின் குழந்தைகளைப் பாதுகாக்க மையம்!

minnambalam : கொரோனா பாதித்த பெற்றோரின், குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின், குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதாக, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை அமைத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த மையம் தமிழகத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தொற்று பாதிப்பு குறையும் என்று நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தேவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு உரிய வெப்ப நிலையை அடைய வேண்டும். எனவே, வெப்ப நிலையை உயர்த்த வேண்டிய பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் ஒடிசா ரூர்கேலாவில் இருந்து ஐந்து டிரக்குகளில் தூத்துக்குடிக்கு ஆக்சிஜன் வருகிறது. அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் தொற்று பாதிக்கப்படாத குழந்தைகளை இந்த மையத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மையத்தில் குழந்தைகளைச் சேர்க்க சைல்டு லைன் 1098, தொலைபேசி எண் 0462 255 1953, வாட்ஸ் அப் எண்99447 46791-ல் தொடர்பு கொள்ளலாம்.

-வினிதா

கருத்துகள் இல்லை: