
நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் புல்லட் ரெயில் திட்டத்தை முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தேசிய அதி வேக ரெயில் கழகம் தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் பங்களிப்பை தவிர, இந்த திட்டத்தில் நான்கில் ஒரு பங்கு வைத்திருக்கும் மராட்டியம் மற்றும் குஜராத் மாநில அரசுகளிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியாண்டில், இரு மாநிலங்களும் மொத்தமாக ரூ.1,000 கோடியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராம் தனது பட்ஜெட் உரையில், மும்பை மற்றும் ஆமதாபாத் இடையேயான அதிவேக ரெயில் திட்டத்துக்கு தீவிர முனைப்பு காட்டப்படும் என கூறினார்.
அதே நேரத்தில் புல்லட் ரெயில் திட்டத்துக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் யார் பயன் அடைவார்கள்?. மராட்டியத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு இந்த திட்டம் எப்படி உத்வேகம் அளிக்கும்? என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, இந்த ரெயில் திட்டத்தை வெள்ளை யானையுடன் ஒப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக