வியாழன், 21 நவம்பர், 2019

கண்ணதாசன் திருட்டு ரெயிலில் வந்தார் ... அதை கலைஞர் என்று மாற்றிய பார்பனர்களும் காங்கிரஸ்காரர்களும் ...

திருட்டு ரயிலில் வந்தது யார் ??
கண்ணதாசனா கலைஞரா..??
திருட்டு ரயில் கருணாநிதி என்று சீமான் தொடங்கி அல்லு சில்லில் இருந்து நேற்றைய கோட்டோவியர் பாலா வரை அவரை பற்றி அவதூறு பரப்பி வருவது அனைவரும் அறிந்ததே.
இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி கண்ணதாசன் அவர்கள் எழுதிய வனவாசம் என்னும் நூலே. அதில் அவர் அவன் பயணச்சீட்டு இல்லாமல் ரெயிலில் பயணித்தான் என்று குறிப்பிட்டிருப்பார். அதில் அவர் தன்னை பற்றி குறிப்பிடும்போதும் மூன்றாமவன் போல "அவன்" "அவன்" என்றே குறிப்பிட்டுள்ளார்.
இதற்கும் மேல் அவர் கலைஞரை அப்படி குறிப்பிடவில்லை என்பதற்கான விளக்கம் என்னவெனில் கலைஞர் எஸ் எஸ் எல் சி ஃபெயில் ஆனவர். கண்ணதாசன் எட்டாவது முடிக்காமல் வெளியேறியவர். அந்த புத்தகத்தில் படிக்கும் போதே எட்டாவது முடித்தவன் எப்படி எழுத்தாளன் ஆக முடியும் என்று கூறிவிட்டு அடுத்த பத்தியில் தான் அந்த திருட்டு ரயில் விசயத்தை பற்றி கூறியிருப்பார். அதாவது தன்னைப்பற்றி..
ஆனால் இந்த ஊடகங்களும் அரைகுறை அறிவுஜீவிகளும் ஒருவகையில் திட்டமிட்டே தான் இதனை கலைஞர் திருட்டு ரெயிலில் வந்தவர் என்று கதை கட்டி விட்டனர்.
நன்றி- A.Parimalam

கருத்துகள் இல்லை: