


ஆனால், இது குறித்து விசாரித்ததில் அந்த தீட்சிதர் தலைமறைவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 7 .15 மணி அளவில் சம்பவம் நடைபெற்ற நிலையில், அந்த தீட்சிதர் 10 மணி வரை கோயிலிலேயே இருந்துள்ளார். 10 மணிக்குப் பிறகு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறை என்பதால் முன்ஜாமீன் பெற மனு அளிக்க முடியவில்லை. இதனால் இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற தீட்சிதர் தரப்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் கடலூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளராகப் பதவியேற்ற அபினவ் ஐபிஎஸ், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். சீருடையில் சென்றவர் கீழே அமர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார். இதன் பின்னரும் கோயிலில் நடைபெற்ற ஒரு விழாவின்போது கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அப்போதும் தீட்சிதர்கள் அவருக்கு சாமி தரிசனம் செய்து வைத்துள்ளனர். கடலூர் எஸ்பி சென்றுவரும் நடராஜர் கோயிலில்தான் தற்போது இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
நவீனமயமான தமிழக காவல் துறையினரால் தீட்சிதர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், தீவிரமாக தேடிவருகிறோம் என்று சொல்வதன் மூலம் காவல் துறை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறது என்கிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக