புதன், 20 நவம்பர், 2019

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு
மாலைமலர் : மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கன அவசர சட்டத்தை பிறப்பித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்துக்கு தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளா

கருத்துகள் இல்லை: