வெள்ளி, 1 நவம்பர், 2019

கீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

கீழடி அகழாய்வு
கீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமிமாலைமலர் : தமிழகத்தின் கீழடியில் 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாட் நாள் விழாவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:
தமிழ்நாடு என்று பெயரை மாற்றி அண்ணா சாதித்தார். கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றி உள்ளது. சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் 12.21 கோடி ரூபாயில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்

கருத்துகள் இல்லை: