சனி, 2 நவம்பர், 2019

கந்து வட்டி கொடுமை: மூன்று குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

தினமணி : சேலம்: சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் மூன்று குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் கிச்சிப்பாளையம் அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் கு.மருதுபாண்டியன் (30). இவா் வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.இவருக்கு பூஜா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனா். இதனிடையே மருதுபாண்டியன் வீட்டுச் செலவுக்காக வட்டிக்கு ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. மேலும் வட்டி தொகையுடன், அசல் தொகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாா்.
இதனிடையே கடன் கொடுத்தவா்கள் தினமும் மருதுபாண்டியனின் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்டு தொல்லை செய்து வந்தனா் என தெரிகிறது.இதனால் மனமுடைந்த மருதுபாண்டியன் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுபற்றி தகவலறிந்த கிச்சிப்பாளையம் போலீஸாா் மருது பாண்டியனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

கருத்துகள் இல்லை: