


தற்போது மக்களின் தங்கத்தை வெளியே கொண்டு வர மத்திய அரசு ‘தங்கம் பொதுமன்னிப்பு திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது இந்த திட்டத்தின்படி மக்கள் வாங்கிய தங்கத்தை கணக்கில் காட்டி, அதற்குரிய வரியை செலுத்தி கருப்பு பணம் அல்லாத தங்கமாக வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி வாங்கிய சுமார் 25 முதல் 30 டன் எடையுள்ள தங்கத்திற்கான வரி கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறதாம்!
ஆனாலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஒரு சில சிக்கல்கள் எழலாம் என்பதால் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னாக தங்க முதலீட்டாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் ( ஆர் எஸ் எஸ் பிளஸ் சாமியார்கள்) மற்றும் தங்க நகை வியாபாரிகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக