புதன், 30 அக்டோபர், 2019

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் .. மார்வாடிகளுக்கு தமிழக நிலத்தை பறித்து கொடுக்க அவசர அவசரமாக சட்டம் .

Mathi Vanan : · விவசாயிகள் வருமானத்தை பெருக்க விவசாய ஒப்பந்த சட்டம்.
குடியரசு தலைவர் ஒப்புதல். இந்தியாவிலே முதலில் தமிழ்நாட்டில் அமல்.
 விவசாயி, விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் வியாபாரிகளிடம் ஒப்பந்தம் போடும் சட்டம்.
இதனால் வியாபாரி நல்ல விலை குடுப்பார். வியாபாரி விதைகள், தொழில்நுட்பமும் குடுப்பார். விவசாயிக்கும் வியாபாரிக்கும் பிரச்சனை என்றால் அரசு நடுவராக சரி செய்யும்.
இதில் வியாபாரி என்ற இடத்தில் அம்பானி அதானி பெருமுதலாளிகளை போட்டுக் கொண்டால், அம்பானி அதானிக்கு பொருள்களை உற்பத்தி செய்யும் கூலித்தொழிலாளிகளாக விவசாயிகள் என்பதை புரிந்து கொள்ளலாம். அம்பானி அதானி ஆலைகள் கூட அமைக்க வேண்டாம். விவசாயி நிலமே அம்பானி அதானியின் ஆலை.
 Devi Somasundaram : · தமிழக அரசு நிறைவேற்றிய நில குத்தகைச் சட்டம் குடியரசு தலைவரால் ஒப்புகை தரப்பட்டது ..செய்தி . .
நீட் சட்டத்துக்கு ஒப்புகை தருவதில் காட்டப் படாத அவசரம் ஏன் இதுல காட்டப்பட்டது . இனி பஞ்சமி நிலம் மட்டும் இல்ல ...குத்தகையா கூட சிறு விவசாயி யாரும் விவசாயம் செய்ய முடியாது ....சாவுங்க .! இவங்களுக்கு தேவை தான் ...எதுக்குமே போராட மாட்டோம் ...பம்முவோம்ன்னா இனி மார்வாடி ,ரிலையன்ஸ் மொத்தமா நிலத்தை குத்தகை எடுத்துட்டு போகப் போறான் ....இவங்க வாய்ல விரல வச்சுக்கட்டும்!

கருத்துகள் இல்லை: