ஞாயிறு, 27 அக்டோபர், 2019

ரஷிய அதிபர் விளாடிமீர் புடின் ஜல்லிகட்டு பார்க்க தமிழகம் வருகிறார் .. சீனாவுக்கு அடுத்து ரஷ்யா கடைக்கண் ..?

வெப்துனியா : சமீபத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகத்திலுள்ள
மாமல்லபுரத்திற்கு வருகைதந்த அடுத்து மாமல்லபுரம் உலகப் புகழ் பெற்றது மட்டுமன்றி, மாமல்லபுரத்திற்கு உலகின் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தற்போது அதிகளவில் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வியாபாரம் அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் சீன அதிபரை அடுத்து வரும் ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் புதின் தமிழகத்துக்கு வர உள்ளதாகவும், அவர் மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் நடைபெற உள்ள  ஜல்லிக்கட்டை நேரில் காண வர விருப்பதாகவும்  தகவல்கள் வெளிவந்துள்ளது

இதன் மூலம் ஏற்கனவே உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மேலும் பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடியும் அலங்காநல்லூர் வருகை தருவார் என்பது என்று எதிர்பார்க்கப்படுகிறது ரஷ்ய அதிபர் புதின் அவர்களின் வருகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் தேதி குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது<

கருத்துகள் இல்லை: