வியாழன், 4 ஏப்ரல், 2019

தமிழகத்தில் 50 வீதம் வட இந்திய அதிகாரிகள் .. தேர்தல் பூத் அதிகாரிகளாக (RSS) இவர்களே ..? தமிழ் பணியாளர்களை தவிர்க்க முயற்சி ....

ஆர் எஸ் எஸ் ஊடகங்கள்
Subaguna Rajan  : தேர்தல் அவசரம் . திமுக தலைமை தேர்தல் பணிக்குழு கவனத்திற்கு . ஒன்றிய(மத்திய) அரசு அலுவலகத்தில் பணிபுரியும்
வடக்கத்திய தமிழ் தெரியாத அதிகாரிகளை ( அவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டு ஒன்றிய அரசு அலுவலகங்களில் 50%ஆகி விட்டது. )
பூத் தலைமை தேர்தல் அதிகாரியாக (Presiding Officers )ஆக பணியமர்த்த திட்டமிட்ட சதி மும்முரமாக நடக்கிறது. அவர்களில் 90% பேர் சங்கிகள் என்பதும் உண்மை.
இதற்கான காரணம் , தமிழக அரசு ஊழியர்களை/ ஆசிரியர்களைத் தவிர்க்கவே. தேர்தல் ஆணையம் இருக்கும் லட்சணத்தில் , மேற்படி சங்கி அதிகாரிகள் எந்த கோளாறும் செய்யத் தயங்க மாட்டார்கள். பூத்களில் நிற்கும் CSIF காவல் படையினரின் மொழியறியாமை மற்றும் behavioural காரணங்களால் செய்யும் அடாவடிகளே தாங்க இயலாது . இந்த கொள்ளையில் , பூத் தலைமை தேர்தல் அதிகாரியும் இந்திக்காரனென்றால் தாங்க முடியாது. அவர்களது செயல்களே இயல்பான அடாவடித்தனமானது . அது கலாச்சார சிக்கல் . இதில் அதிகாரமும் சேரும் போது ஆபத்து அதிகம் . எனவே இன்று நடக்கும் தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான கூட்டத்தில் இந்த பிரச்னை பேசப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் . மொழியறியாதவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என உறுதிப் படுத்த வேண்டும்
சுப குணராஜன் அவர்கள் கூறும் இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது, அல்லது அதிர்ச்சி அளிக்கவில்லை. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
வட நாட்டு அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஒன்றிய நிறுவனங்களில் போடுகிறார்கள், நிறைக்கிறார்கள் என்று கத்திக் கொண்டுவந்தோம். ஏனோ இவர்கள் எல்லாம் இதுவரை அதிகம் காதில் போட்டுக் கொண்டதில்லை. கத்திக்கொண்டிருந்த எங்களை இனவாதிகள் என்று நினைத்திருப்பார்கள் போல. 2014 இலிருந்து ஆதாரபூர்வமாக எத்தனை முறை இதைப்பற்றி பேசியும் எழுதியும் வருகிறோம்?
இப்போதைக்கு சகோதரச் சண்டை போட நேரமில்லை.
திமுக கூட்டணிக் கட்சிகள், அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை உடனடியாக இதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் வட இந்தியர் புலப்பெயர்ச்சியால் ஏற்பட்டு வரும் டெமாகிரபிக்கல் மாற்றமும் நிர்வாகத்தில் அவர்களால் ஏற்பட்டுள்ள மாற்றமும் இனவழிப்பின் கூறுகள். முட்டாள் தமிழா, முட்டாள் திராவிடா, முட்டாள் தோழா - இப்போதாவது விழித்துக்கொள். குரல் கொடு.
பாஜக-அதிமுக அணியை கூண்டோடு காலி செய்யவேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதன்மையானது இதுதான்.

கருத்துகள் இல்லை: