வியாழன், 4 ஏப்ரல், 2019

அதானி - டாட்டா நிறுவனத்தின் 35,000 கோடி ரூபாய் கடனை மத்திய அரசின் பரிந்துரையுடன் ரத்து.. flashback

Saravanaperumal Perumal : உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ராகுல் காந்தி ஏன் மோடியை நீ காவல்காரன் அல்ல பக்கா திருடன் என்று சொல்கிறார் என்பது?
மத்திய அரசின் பரிந்துரையுடன் “ அதானி - டாட்டா நிறுவனத்தின் 35,000 கோடி ரூபாய் கடனை ரத்து செய்ய தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் ஓப்புதல் கொடுத்த ஸ்டேட் பேங்க் இந்தியா அந்த கடனை சாமானியர்கள் தலையில் கட்டியது எப்படி என்று தெரியுமா???? நீங்களும், நானும் இந்த கடனை மறைமுகமாக அடைத்து வருகிறோம் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
கல்வி கடனை ஒன் டைம் செட்டில்மெண்ட்டில் கட்டினாலே அடுத்து ஏழு வருடங்களுக்கு கடன் வாங்க முடியாது.. அந்த write off கணக்கு சிபிலில் ஏறிவிடும். பிறகு அவன் வாழ்நாள் முழுவதும் கடன் வாங்குவதற்குச் சிரமப்பட வேண்டும். கல்வி கடனுக்கும், விவசாய கடனுக்கும் அவ்வளவு அழுத்தம் கொடுக்கும் வங்கிகள், பெரு நிறுவனங்களுக்கு அள்ளி கொடுத்துவிட்டு, அதையும் சாமானியர்கள் தலையில் கட்டுகிறதை உணர்ந்தீர்களா??? சிந்தியுங்கள் .. .

கருத்துகள் இல்லை: