சனி, 23 மார்ச், 2019

நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்


நாடார் வரலாறு கறுப்பா? காவியா? – நூல் வெளியீட்டு விழாவுக்காக கடந்த மார்ச் 22, 2019 அன்று சென்னை வந்திருந்த வழக்கறிஞர் லஜபதி ராய் அவர்களிடம் இந்நூல் உருவான வாரலாறு குறித்தும் இந்த நூல் பேசும் வரலாறு குறித்தும் எடுக்கப்பட்ட நேர்காணல் !
கேள்வி : நாடார்கள் வரலாறு – கருப்பா? காவியா? என்ற இந்த புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன? அதற்கான சமூகக் காரணம் என்ன?
கேள்வி : நடைமுறையில் நாடார் சமூக மக்கள் காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா?
கேள்வி : தென் தமிழக இந்து நாடார் மக்கள் மறக்க நினைக்கும் வரலாறு இது என்கிறீர்கள். அம்மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா?


கேள்வி : திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டத்தை நூலில் குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டில் அதுதான் முதல் ஆலய நுழைவுப் போராட்டமா?
கேள்வி : இந்துமதத்தில் நாடார் மக்கள் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகர்ந்த அதே 1900 கால கட்டத்திலேயே, தமக்கு கீழ் இருந்த சாதிகளை ஒடுக்குவதும் நடந்திருக்கிறது. உங்கள் புத்தகத்திலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் பள்ளர், பறையர் குழந்தைகளை விடமாட்டோம்னு சொல்லி நாடார்கள் பிரச்சினை செய்வதையும் அதை எதிர்த்து, அதே நாடார்களில் ஒருவர் பேசுவதையும் பதிவு செய்திருக்கிறீர்கள். தான் ஒடுக்கப்படுவதில் இருந்து விடுபடுகிற ஒரு சமூகம் அதே கால கட்டத்தில் ஒடுக்குவதையும் சேர்த்தே செய்கிறது. இந்த முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்வது?
கேள்வி : இந்த நூலிற்கு நீங்கள் பல்வேறு ஆய்வு நூல்களை பயன்படுத்தி இருக்கிறீர்கள். நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களின் சமூக வாழ்க்கை எப்படி இருந்தது? குறிப்பாக மறவர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் இன மக்களும் ஒடுக்கப்பட்டிருந்தார்களா? அவர்களின் சமூக வாழ்க்கை எப்படி இருந்தது?
கேள்வி : தோள் சீலை அணிவதை ஒரு போராட்டமாக நடத்திய சூழ்நிலையில், நாடார் பெண்கள் இழிவாக நடத்தப்பட்ட அந்த சமயத்தில் இம்மக்கள் இப்படி இழிவாக நடத்தப்படுகிறார்களே என மற்ற சாதியினர் யாரும் பரிந்து பேசினார்களா? அந்த போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்களா? அப்படி ஒரு சூழல் இருந்ததா?
கேள்வி : சிவகாசி கலவரத்தின் போது அருந்ததியர் இளைஞர்கள் உதவிக்கு வந்ததாகச் சொல்கிறீர்கள். இன்னும் பல இடங்களில் இதர தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் நாடர்களுடன் தோள் கொடுத்து நின்ற சம்பவங்களும் இந்த நூலில் குறிப்பிடப்படுகிறது. அப்படி ஒரு இணக்கத்தை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் நடத்திய வழிமுறைகள் என்ன?
கேள்வி : நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா?
கேள்வி : நாடார் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த வரலாறு இந்த நூலில் இருக்கிறது. ஆனால் அது அவர்களுடைய வரலாறு மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும்தான் என்று நூலில் ஒரு பெரிய சாதி பட்டியலைக் கூறுகிறீர்கள். அது குறித்து விளக்க இயலுமா?
நேர்காணல் : வினவு செய்தியாளர்

கருத்துகள் இல்லை: