தினமலர் :சென்னை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ்
வெற்றி செல்லாது என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக்கோரிய திமுகவின் சரவணன் கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கூறி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தொடர்ந்து மார்ச் 22 (இன்று) க்குள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட், நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது எனக்கூறினர். மேலும் ஏ.கே.போஸ் இறந்துவிட்டதால், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக்கூறி சரவணன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக