ஞாயிறு, 17 மார்ச், 2019

"1947 இந்தியா".. 90% மக்கள் ஏழ்மை, பசி, பட்டினி, நோய் என்று துன்பப்பட்டு கொண்டிருந்த நேரம்

Swathi K : **இந்த நாட்டின் கல்வியறிவு வெறும் 12%.. பெண்கள் கல்வியறிவு
வெறும் 2%.. அதாவது 100க்கு 2 பெண்களுக்கு மட்டும் தான் தன்னோட பெயரை எழுத தெரியும்.. குலகல்வி திட்டம்.. கல்வி உயர்ந்த ஜாதி, வசதியானவர்களுக்கு மட்டுமே என்ற நிலை. 10,000ல் ஒருவர் மட்டும் 8ம் வகுப்பு கடந்த காலம்..
**இந்த நாட்டின் சராசரி மனித ஆயுள் 32 வருடங்கள் தான்.. கொஞ்சம் கூட மருத்துவ கட்டமைப்பு இல்லாத ஒரு தேசம்.. ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூட இல்லாத அவலம்..
**இந்த நாட்டில் நூற்றுக்கணக்கான ஜாதிகள், மொழிகள், கலாச்சாரம், இருபதிற்கும் மேற்பட்ட மதங்கள்.. ஆயிரம் முகம் கொண்ட நாடு.. உலகத்தில் எந்த நாடும் இவ்வளவு பன்முக தன்மை கொண்ட நாடு கிடையாது.. இது பெருமை.. ஆனால் இது மாபெரும் பிரச்னையும் கூட இந்த நாட்டில்.. எப்போதும் பிரச்சனைகள்..
**உலகத்தில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு.. அதுவே மாபெரும் பிரச்சனை அந்த நாட்டுக்கு..
**இந்த நாட்டில் மக்களின் மத, ஜாதிய உணர்ச்சிகளை தூண்டி அதில் மக்களை பிளவுபடுத்தி குளிர்காயும் கூட்டங்கள்.. தீர்க்க முடியா மத கலவரங்கள் ஒரு புறம்..
**ஒட்டுமொத்த நாட்டின் சொத்து, முன்னேற்றம் என்று எல்லாமே ஒரு குறிப்பிட்ட உயர்சாதியை மட்டும் அடைந்து கொண்டு இருந்த நேரம்..
**இந்த நாட்டை 250 வருடமாக ஆண்ட நாடு இந்த நாட்டை விட்டுச்செல்லும் பொது ஒட்டுமொத்த சொத்தையும் "ஆட்டய" போட்டு இந்த நாட்டை ஒரு பிச்சைகார நாடாக விட்டுச்சென்றது..
**அமெரிக்காவும், ரஸ்யாவும் வானத்தில் சாட்டிலைட் விட்டுக்கொண்டருந்த நேரத்தில், ஐரோப்பிய நாடுகள் தொழில் புரட்சியில் தங்களை வலிமை படுத்திக்கொண்டு இருந்த நேரம்.. இந்த நாட்டில் மட்டும் மக்கள் கைநாட்டில் இருந்து தங்கள் பெயரை எழுத பழகிக்கொண்டிருந்தார்கள்..
**இந்த நாட்டின் வளர்ச்சி 1900-1947 வரை 0.001%.. வளர்ச்சியே இல்லாத நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதல் ஐந்து இடத்திற்குள் இருந்த நாடு இது..

**நாட்டில் 90% மக்கள் ஏழ்மை, பசி, பட்டினி, நோய் என்று துன்பப்பட்டு கொண்டிருந்த நேரம்.
**கல்வியறிவு, மருத்துவம், தொழில் வளர்ச்சி இப்படி எல்லாவற்றிலும் உலக தரவரிசையில் கடைசி 10 இடத்திற்க்குள் இருந்த நாடு..
**உலகத்தில் மக்கள் வாழ தகுதி இல்லாத நாடு இந்த நாடு என்று உலக மீடியாக்களால் கேவலமாக விமர்ச்சிக்கப்பட்ட நாடு..
எந்த நாடு என்று கேக்கிறீர்களா?? அது தான் "1947 இந்தியா".. இது தான் நாட்டின் நிலை நமக்கு சுதந்திரம் கிடைக்கும் போது.. மேலே உள்ளவற்றை வரலாறு தெரியாமல் இந்தியாவில் தேனாறும், பாலாறும் ஓடியது சுதந்திரம் வாங்கும் போது என்று பேசிக்கொண்டு திரியும் மூடர்களுக்காக சொல்கிறேன்...
இன்று இந்தியாவின் சாதனைகள் என்று நாம் குறிப்பிடும் அனைத்துக்கும்.. AIIMS, IIT, IIM முதல்.. நிலவுக்கு, செவ்வாய்க்கு விண்கலன் அனுப்பிய ISRO வரைக்கும் அடிக்கல் நாட்டி, அஸ்திவாரம் போட்டுகொடுத்தவர் நேரு.. 1947ல் உலகத்தின் பின்தங்கிய நாடுகளின் வரிசையில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டிபோட்டு வந்த இந்தியா... இன்று அனைத்து முன்னேறிய நாடுகளுடன் போட்டிபோட முடிகிறது என்றால் அதற்க்கு வலிமையான அடித்தளம் அமைத்து கொடுத்தது நேரு.. ஆயிரம் சாதனைகள் சொல்லலாம்.. நேரமில்லை.. எங்கிருந்து இங்கு வந்து இருக்கிறோம்.. யோசிச்சு பாருங்கள்..
பல முகம் கொண்ட இந்தியா போன்ற நாட்டுக்கு ஜனநாயகம் எவ்வளவு முக்கியம்.. என்று அருமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கியவர் நேரு.. (அதை உடைத்த பெருமை மோடியை சேரும்)
இந்தியா கண்ட பிரதமர்களில் மட்டும் நேரு முதன்மை இல்லை.. உலகத்தின் சிறந்த பிரதமர் அவர்.. உலகத்தின் சிறந்த தலைவர்கள் என்று உலகம் கொண்டாடும் லிங்கன், சர்ச்சில் இவர்களை விட பன்மடங்கு சிறந்தவர் நேரு.. அவர்கள் சந்தித்ததை விட 100 மடங்கு பிரச்சனைகளை நேரு எதிர் கொண்டு சமாளித்தார்..
ஏழ்மை, வறுமை, படிப்பறிவின்மை, மதவாதம், மூடநம்பிக்கைகள், சாதியம் இவற்றில் ஊறிக் கிடந்த நாட்டை தனது நவீன, அறிவியல் சிந்தனை மூலம் அருமையான சமூகமாக கட்டமைக்க முனைந்தவர் நேரு.
நம்மோடு சுதந்திரம் அடைந்த மற்ற நாட்டின் இன்றைய நிலைமையை யோசிச்சு பாருங்கள். ஜனநாயகத்தின் அருமை புரியும்..
சுதந்திரத்திற்கு பிறகு நேருவுக்கு பதிலாக மோடி போன்ற ஒருவர் இந்தியாவை ஆளவிட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும்.. இந்தியா 20+ நாடுகளாக உடைந்து இருக்கும்.. அல்லது இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா நிலையை விட மோசமாக இருந்து இருக்கும்.. இன்றைய மோடியின் அனைத்து தோல்விக்கும், மோடி எப்படி "நேரு","காந்தி"னு குறை சொல்லுகிறாரோ.. அதே போல் ஆங்கிலேயர்களை குறைசொல்லி கொண்டிருப்பார் மோடி..
வரலாற்றை திருப்பி பாருங்கள்.. நேருவின் அருமையை புரிந்து கொள்ளுங்கள்.. அவரின் கனவுகள் அனைத்தும் ஒரு நாள் நிறைவேறும்... ஜனநாயகத்தை உடைக்க மோடி எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்போம்

கருத்துகள் இல்லை: