புதன், 20 மார்ச், 2019

திருமாவளவனுக்கு பானை சின்னம் ... வாசனுக்கும் கமலுக்கும் ஓடிசென்று விரும்பிய சின்னங்கள் கொடுத்த (தறுதலை) ஆணையம்

LR Jagadheesan : அரசியல் கட்சி
சின்னங்களும் கூட இங்கே தனிமனித
சொத்துரிமையை போலத்தான் ஒதுக்கப்படும் போல. தாமாகவை துவக்கிய தந்தையின் சின்னத்தை அவரது தனயனுக்கு தப்பாமல் ஒதுக்க முடிந்த இந்திய தேர்தல் ஆணையத்தால் திருமாவளவனே முன்பு நின்று தேர்தலுக்குத்தேர்தல் உழைத்து பிரபலப்படுத்திய அவரது சின்னத்தை ஒதுக்க “இயலவில்லை, சட்டத்தில் இடமில்லை, விதிகள் அனுமதிக்கவில்லை” என்பதெல்லாம் ஏற்கக்கூடிய வாதக்களா என்ன?
சின்னத்தனம், சில்லறைத்தனம் என்பதைத்தவிர?
இந்தியாவில் “சுயாதீனம்” என்றோ “பொது சிவில் சமூகம்” என்றோ எவையுமே உருவாகவே உருவாகாது போல. சனாதன சாக்கடையை சந்தனம் என்றும் சாதியையே சமூகத்தின் அடிக்கட்டுமானமாகவும் 21ஆம் நூற்றாண்டிலும் கட்டிக்கொண்டு அழும் ஊரில் ஜனநாயகமே ஜாதிநாயகம் தான்.

கருத்துகள் இல்லை: