
விவசாயத்திற்கு ஆதரவாகவும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தினால் தான் விவசாயிகளின் பிரச்னை தீரும். அதற்கு மோடியின் திட்டம் உதவி செய்யும் என்கிறார் ரகுராம்.
கடந்த நான்கு பட்ஜெட்டுகளை பா.ஜ., அரசு அளித்தபோது விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதாக காட்டிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பது வாடிக்கை. ஆனால் பொருளாதார நிபுணரான ரகுராம், இந்த யோசனைக்கு எப்போதுமே எதிரானவர்.< நிதித்துறை அமைச்சர்
அவர் கடைசியாக எழுதியுள்ள ‛மூன்றாவது துாண்: சந்தையும் அரசும் மக்களை எவ்வாறு கைவிட்டன'' என்ற தலைப்பிலான புத்தக விற்பனையில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
காங்., அறிவித்த ‛நியாய்' என்று அழைக்கப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் தொடர்பான ஆலோசனைகளை ராகுலுக்கு வழங்கியதாக ரகுராம் ஒப்புக்கொள்கிறார். இந்தியாவில் உள்ள 20 சதவீத ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் என ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் தான் அது.
இத்திட்டத்தை முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் செய்து பார்க்க வேண்டும் என்று ரகுராம் கூறியதை ராகுலும் ஏற்றுக்கொண்டாராம். ரகுராம் கூறும்போது, ‛‛இத்திட்டம் பற்றி என்னால் முடிந்த யோசனைகளை வழங்கி உள்ளேன். இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும்'' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக