

கன்னியாகுமரி தொகுதிக்கு கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ.,வான வசந்தகுமார், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2014 ல் காங் தனித்து போட்டியிட்ட போது இவர் 2.44 லட்சம் ஓட்டுக்கள் பெற்றார். இது குறித்து காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், பார்லி.,யில் சிறுபான்மையினர் குரல் ஒலிக்காமல் போக உள்ளது துரதிஷ்டவசமானது. காங்.,க்கு சிறுபான்மையினரிடம் பாரம்பரிய ஓட்டுவங்கி உள்ளது. அவர்கள் இந்த முடிவால் மனமுடைந்துள்ளனர் என்றார்.
தேனி, திருச்சி நிலைமை என்ன ?
இதே போன்று தேனி தொகுதியில் 2 முறை எம்.பி.,யாக இருந்த ஆரூண் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் மாநில தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி ஆரூணுக்கு சீட் மறுக்கப்பட்டதுடன், இளைஞர் காங்., தலைவராக உள்ள ஆரூணின் மகன் ஹசன் மவுலானாவுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது தேனி தொகுதி காங்., வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தொகுதியை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள இளங்கோவன், காங்., வேட்பாளரான திருநாவுக்கரசிற்கு கடும் நெருக்கடியை தருவார். திருச்சியில் மக்களிடம் ஆதரவுள்ள அடைக்கலராஜிற்கு சீட் தொகுதி வழங்கப்டாமல் புறக்கணிக்கப்பட்டதும் காங்., தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக