
மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் போலியாக கையெழுத்திட்ட போலி நியமனக் கடிதத்தை(appointment letter) அளித்துள்ளார்’ என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், முரளிதரராவ் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறை, 406, 420, 468, 471, 506, 120-b,156 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க பொதுச் செயலாளராக உள்ள முரளிதரராவ் மத்திய அமைச்சரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரளிதரராவ், தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டை, முரளிதரராவ் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக