சனி, 15 செப்டம்பர், 2018

சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடி ஆணை: மஹாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவு

ஆந்திர முதல்வருக்கு எதிராக பிடி ஆணை: மஹாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவுtamil.news18.com: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு  நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் பிணையில் வெளி வரமுடியாத பிடி ஆணையை பிறப்பித்துள்ளது. கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்தெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது.


தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சந்திரபாபு நாயுடு ஆஜராக பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாததால் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிணையில் வெளிவரமுடியாத பிடி ஆணை பிறப்பித்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<

கருத்துகள் இல்லை: