வெள்ளி, 19 ஜனவரி, 2018

Gutka nexus ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி ஏன் சேகர் ரெட்டியின் கைத்தடியிடம் பேசுகிறார்

Shankar A : கடும் கோபத்தில் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
சவுக்கில் வெளியான நீதித்துறை கட்டுரையில், நீதித்துறையின் ப்ரோக்கரான நீதிதேவன் கிருஷ்ணமூர்த்தி குறித்து விபரங்கள் வெளியானதும், அண்ணன் கிருஷ்ணமூர்த்தி கடும் கோபமடைந்துள்ளார்.
உடனடியாக மணல் கடத்தல் மாபியா மன்னன் சேகர் ரெட்டியின் கைத்தடியாக உள்ள உபேந்திரா என்பவரை அழைத்துள்ளார். இந்த உபேந்திரா, மணல் லாரி உரிமையாளர்களின் சங்கம் ஒன்றை வைத்துள்ளார். ஒரு ஸ்மால் டைம் ரவுடி.
யார் இந்த சவுக்கு. அவனைப் பற்றிய விபரங்களை சேகரியுங்கள் என்று கூறியிருக்கிறார். விசாரித்த உபேந்திரா, அண்ணன் கிருஷ்ணமூர்த்தியிடம், அவன் பெயர் சங்கர். உளவுத்துறையில் பணியாற்றியிருக்கிறான். அவன் மேல் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் நடவடிக்கை எடுத்து அவனை டிஸ்மிஸ் செய்து விட்டார். அதனால் அவரை பழிவாங்குவதற்காக அவர் மீது வழக்கு போட்டு பல சிக்கல்களை உருவாக்கினான் என்று கூறியுள்ளார்.
சரி இது குறித்து நான் ஜாபரிடம் பேசிக் கொள்கிறேன் (வேற ஆளே கிடைக்கலயா ?) என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி, நான் டெல்லி செல்கிறேன்.
அமித் பாயை பார்க்க வேண்டும். நான் வருவதற்குள் இவனைப் பற்றி அனைத்து விபரங்களையும் விசாரித்து வையுங்கள். என்னைப் பற்றிய எல்லா விபரங்களும் எப்படி வெளியானது என்பது தெரிய வேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று இன்று இரவு அமித் பாயை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தி சார். என்னைப் பற்றிய விபரங்களை, உபேந்திரா போன்ற ஸ்மால் டைம் ரவுடியிடமெல்லாம் விசாரிக்க வேண்டாம். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள என் புத்தகத்தில் என்னைப் பற்றிய அனைத்து விபரங்களும் உள்ளது.
சனிக்கிழமை மாலை, சென்னை புத்தக கண்காட்சியில், அரங்கு எண் 690ல் இருப்பேன். அங்கே இல்லாவிட்டாலும் வேறு அரங்கில் சுற்றிக் கொண்டிருப்பேன். அங்கே வாருங்கள். நேராக சந்திக்கலாம்.
என் புத்தகத்தை கையெழுத்திட்டு தருகிறேன். அதில் நீங்கள் கேட்கும் அனைத்து விபரங்களும் உள்ளன. உங்களைப் பற்றிய தகவல்கள் எப்படி வந்தது என்று கேட்காதீர்கள். அதை ஒரு நாளும் உங்களால் மட்டுமல்ல, உங்கள் நண்பர் ஜாபர் சேட்டாலும் கண்டு பிடிக்க முடியாது.
உபேந்திரா போன்ற சின்ன ரவுடியிடமெல்லாம் என்னைப் பற்றி விசாரித்து சிரமப்படாதீர்கள்.
அமித் பாயை கேட்டதாக சொல்லவும். கேரளா சென்றால் சதாசிவத்தையும் விசாரித்ததாக சொல்லவும்.
ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி ஏன் சேகர் ரெட்டியின் கைத்தடியிடம் பேசுகிறார் என்று விசாரித்தபோதுதான் மற்றொரு உண்மை வெளி வருகிறது. இந்த கிருஷ்ணமூர்த்திதான், அண்ணன் சேகர் ரெட்டிக்கும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுத் தந்தது என்பது.
https://www.savukkuonline.com/13071/

கருத்துகள் இல்லை: