புதன், 17 ஜனவரி, 2018

டெல்லி எய்ம்ஸ் தமிழக மாணவன் சரத் பிரபு அதிக இன்சுலின் ஏற்றி கொலை ,,,,,......???


மாலைமலர் :தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத்பிரபு மருத்துவம் படித்திருந்தார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியின் கீழ் இயங்கும் யூ.சி.எம்.எஸ் கல்லூரியில் எம்.எஸ். படித்து வந்த அவர், இன்று காலை விடுதி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  விடுதி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சரத்பிரபுவின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்விற்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
;காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. உயிரிழந்த சரத்பிரபுவின் உடலுக்கு அருகில் ஊசி மருந்துகள் கிடந்துள்ளன. அவரது உடலில் அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்து ஏற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
முதலில் சரத்பிரபுவை மயக்கநிலையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரத்பிரபு உட்பட 4 தமிழக மாணவர்கள் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் தமிழகம் வந்துள்ள நிலையில், மற்ற இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்."
மாணவர் சரத்பிரபு மரணமடைந்துள்ள நிலையில், அவரது வீட்டிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு டெல்லியில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரவணனின் தந்தை கணேசன் சென்றுள்ளார். அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, டெல்லி காவல்துறையினர் உண்மையை மூடி மறைப்பதில் கைதேர்ந்தவர்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.<




கருத்துகள் இல்லை: