விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின்போது, விளையாட்டில் பங்கேற்றும் மாடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் இடத்தில் வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஒரு காளை ஆவேசமாக சீறிப் பாய்ந்தது.
காளை முட்டியதில் சுமார் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவர் குழுவினர் முதல்உதவி சிகிச்சை அளித்தனர். மோசமான நிலையில் படுகாயமடைந்திருந்தவர்கள் மதுரை நகரில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(19) என்பவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது, சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக