திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கேரளா திறந்த வெளி கழிப்பிடங்கள் அற்ற முதல் மாநிலம் ! வாழ்த்துக்கள் !

திறந்தவெளி அசிங்கமில்லா முதல் மாநிலமாகிறது கேரளா திருவனந்தபுரம்: திறந்தவெளியில் அசிங்கம் செய்யாத, முதல் மாநிலமாகிறது கேரளா. அதன்படி, வரும் நவம்பர் மாதத்துக்குள், 941 கிராம பஞ்சாயத்துகளில், 1.90 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசின் முதல்வராக, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் உள்ளார். நாட்டில், 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற முதல்
மாநிலமாக திகழும் கேரளா, மற்றொரு பெருமையையும் பெற உள்ளது; Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ  :  ரேஷன் அரிசி முதல் காய்கறி, பழங்கள், மருந்து பொருள், மின்சாரம் முத்துட்டுக்கு வட்டிப்பணம் அனைத்தையும் கேரளாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு குப்பை, ஆஸ்பத்திரி, கசாப்புக்கடை, கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுகள், செருப்புகள் மற்றும் பாழாய்ப்போன சினிமாக்காரிகளை தான் நாம் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்........ அவங்க சுத்தமா இருப்பாங்க. ஆனால் அவர்கள் மனதில் கொஞ்சம் கூட தரம் இல்லையே இவர்கள் சில நேரங்களில் சீனர்களை கூட சூட்சுமத்தில் மிஞ்சிவிடுவார்கள்.......
திறந்தவெளியில் அசிங்கம் செய்யப்படாத, முதல் மாநிலமாகிறது.
இதற்காக துவங்கப்பட்ட, 'சுசித்வா மிஷன்' எனப்படும் துாய்மை இயக்கத்தின் செயல் இயக்குனர் வாசுகி கூறியதாவது:பொது இடங்களிலும், திறந்தவெளி யிலும் அசிங்கம் செய்வதை தடுக்க, இந்த இயக்கம் துவக்கப்பட்டது;

அதன்படி, 308 கோடி ரூபாய் செலவில், மாநிலத்தின், 941 கிராம பஞ்சாயத்துகளில், 1.90 லட்சம் கழிப்பிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. பல்வேறு நிலப் பரப்புகளைஉள்ளடக்கிய கேரளாவில், மிகுந்த சிரமத்துக்கு இடையே, இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை, 35 சதவீத கழிப்பிடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட, 50 கிராம பஞ்சாயத்துகள், ஏற்கனவே திறந்தவெளி அசிங்கமில்லா பகுதிகளாக மாறியுள்ளன. மேலும், 70 ஆயிரம் கழிப்பிடங் கள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. நவம்பர் மாதம் முதல், நாட்டின் திறந்தவெளி அசிங்கமில்லா மாநிலமாக கேரளா திகழும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  தினமலர்.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

pambaiyil barkkavum during sabarimala season