விளைவு எல்லா நகரங்களிலும் எந்த வசதிகளும் இல்லாத சேரிகளில் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். நடுத்தர வர்க்கமும் ஓரளவு பாதிக்கப்படுகிறது. கனிம வளங்கள், சுற்றுலா பகுதிகளிலும் இந்த அழிவு பெரும் பாதிப்புகளை தோற்றுவித்திருக்கிறது. மும்பை முதல் அஸ்ஸாம் வரை இந்தியா முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றனது. அரசு நிர்வாகமோ செயலிழந்து போயிருக்கிறது. இந்த புகைப்படங்களின் மூலம் நமது மக்கள் எத்தகைய அபாயங்களில் வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது.
அஸ்ஸாம்
காம்ருப் மாவட்டத்தின் ராஜபரி கிராமத்தை சேர்ந்த வயதானவர், மூழ்கிய
நிலையில் இருக்கும் மின் டிரான்ஸ்பாரின் அருகில் வெள்ளத்தைக் கடந்து செல்ல
படகை பயன்படுத்துகிறார்.
அஸ்ஸாம்
காம்ரூப் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாயோங் கிராமப் பகுதியில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் வெள்ள நிவாரணப்பொருளை பெறுவதற்கு படகின் மூலம்
செல்கின்றனர்.
அஸ்ஸாம்
காம்ரூப் மாவட்டத்தில் உள்ள பாணிகாட்டியில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த
மக்கள் தங்களுக்கான உணவை இரயில் தண்டவாளத்தின் அருகே சமைக்கின்றனர்.
அஸ்ஸாம்
மோரிகோன் மாவட்டத்தை சேர்ந்த சில்டூபியில் வீடுகள் வெள்ளத்தால்
மூழ்கியதால் மூதாட்டியை பாதுக்காப்பான இடத்திற்கு தூக்கிக் கொண்டு
செல்கினறனர்
அஸ்ஸாம்
சில்டூபி கிராமத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
தங்களின் காலநடைகளுடன் பாதுக்காப்பான இடத்திற்கு படகில் செல்கின்றனர்.
அஸ்ஸாமில் தொடர்ந்து கொட்டித்தீர்த்த பருவ மழை வெள்ளத்தினால் 12 லட்சம்
மக்கள் தங்களின் வெள்ளம் புகுந்த வீட்டில் வசிக்க முடியாமல்
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தின் கதிகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வெள்ளத்தால் மூழ்கிய சாலையை மக்கள் கடந்து செல்லும் காட்சி.
பீகார் கதிகர் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உடைமைகளோடு பாதுக்காப்பான இடத்திற்கு படகில் செல்கின்றனர்.
அஸ்ஸாம்
மோரிகோன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கெட்
வழங்கும் போது அதைப் பெற முயற்சிக்கும் குழந்தைகள். ஒரு வாரம் பெய்த கன
மழையினால் 12-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு மேலும் பல்லாயிரக்கணக்கான
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மோரிகோன்
மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த ஒரு குடும்பத்தினர் வாழை-கட்டுமரத்தை
பயன்படுத்தி மீன்பிடி வலைகளைத் தாண்டி பாதுக்காப்பான இடத்திற்கு
செல்கின்றனர்
அஸ்ஸாம் மாநிலம் இந்திய-பூட்டான் எல்லையருகே உள்ள சிராங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்கின்றனர்
அஸ்ஸாம் மாநிலம் கசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ள நீரில் பாதி மூழ்கிய நிலையில் காணப்படும் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம்.
சாவித்திரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மகாராஷ்டிரா, மும்பைக்கு தெற்கே மாகாத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒன்று சரிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக