வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக் பாட்மின்டன்:சிந்து வெற்றி; இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதி?

ரியோ டி ஜெனிரோ: பாட்மின்டன் அரையிறுதிபோட்டியில் சிந்து வெற்றிபெற்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அடுத்தபதக்கம் உறுதியானது. ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பாட்மின்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து மற்றும் ஜப்பான் வீராங்கனை நொசாம்பி ஓக்குஹாரா ஆகியோர் மோதினர். துவக்கம் முதலே முன்னிலை பெற்று வந்த இந்திய வீராங்கனை சிந்து முதல் செட்டில் 19-21 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைபற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் அபாரமாக விளையாடிய சிந்து 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியானது. இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதுகிறார். இதையடுத்து ஒலிம்பிக்கில் இந்தியா தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  dinamalar.com

கருத்துகள் இல்லை: