திங்கள், 15 ஆகஸ்ட், 2016

தன்னெழுச்சியாக திரண்டெழுந்த மக்கள்; உனா யாத்திரை.... கட்சிகளையும் தலைவர்களையும் முன்னிறுத்தாமலேயே

una fin 5
thetimestamil.com :உற்சாகமும் ஆர்வமுமாக பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி …ஆளும் கட்சியோ, ஆண்ட கட்சியோ அல்லது புகழ்பெற்ற தலைவர்களோ இல்லாமல் உனா சுதந்திர யாத்திரை தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கான தலித்துகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்திருக்கிறது.  பேரணியில் பங்கேற்றவர்களிடம் காணக்கிடைக்கும் உணர்வு மயமான நிலை, இதுவரை காணாதது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரிடத்திலும் உற்சாகம், ‘இனியும் உங்கள் அடிகளை பொறுத்துக்கொள்ள மாட்டோம்; நாங்கள் ஒன்றிணைந்துவிட்டோம்’ என்பதாக…அதை இதோ இந்த ஒளிப்படங்களில் காணுங்கள்…

una fin 7
பேரணியில் ஒரு அட்டை வாசகம்…
una fin 8
ஆவணப்பட இயக்குநர்  ஆனந்த்பட்வர்த்தன் பேரணியை ஒளிப்பதிவு செய்கிறார்…
una fin 9
உனா நகரில் தாக்கப்பட்ட இளைஞர்களுக்கு நீதி வேண்டும் என முழுங்குகிறார்கள்…
una fin 10
பேரணியில் கலந்துகொண்ட ஒரு இஸ்லாமிய முதியவர்…una fin 11
முழக்கம் எழுப்பும் சிறுவர்கள்…
una fin 12
பேரணியின் போது பெண்கள்…una fin
பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டம்..
una fin 3
பேரணிக்கு வந்திருந்த திரளான இஸ்லாமியர்கள்…


una fin 6
பேரணி ஒருங்கிணைப்பாளர் ஜிக்னேஷ் மேவானி, ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா பொதுக்கூட்ட மேடையில்…
una fin 2
கலைக்குழு பாடல் இசைக்கிறது…
படங்கள்: Dalit Camera: Through Un-Touchable Eyes

கருத்துகள் இல்லை: