செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

விடுதலை சிறுத்தைகள் பாஜகவுடன் சேர்வதற்காக காங்கிரசை தாக்குவதா ? ஜோதிமணி ஆவேசம் !


பிரதமர் மோடி அளவுக்கு மன்மோகன் சிங் பேசியதில்லை' என விகடன்.காம் தளத்திற்கு பேட்டியளித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்< . ' தலித் மக்கள் மீது இப்போது நடக்கும் கொடூர சம்பவங்கள் அப்போது நடந்ததா?' எனக் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி. ' தலித்துகளைத் தாக்காதீர்கள். என் மீது தாக்குதல் நடத்துங்கள்' என உருக்கமாக வேண்டுகோள் வைத்தார் பிரதமர் மோடி. இந்தக் கருத்துக்கு வி.சி.கவின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆதரவு தெரிவித்துப் பேசியிருந்தார். இதற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ' மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் நாம் இருக்கும்போது, பொதுச் செயலாளரின் கருத்துக்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன' என தொல்.திருமாவளவனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


கருத்துகள் இல்லை: