புதன், 27 ஜனவரி, 2016

திருபாய் அம்பானிக்கு பத்மவிபூஷன்....இந்திய தொழிலதிபர்களின் ஆன்மாவுக்கு செலுத்தும் மரியாதை: முகேஷ் அம்பானி


நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகள், ஒவ்வொரு  துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது நேற்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது தந்தையும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனருமான மறைந்த திருபாய் அம்பானிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு அவரது மகனும்; தொழிலதிபருமான முகேஷ் அம்பானி நன்றி தெரிவித்தார். எப்படியாவது நாட்டின் சட்டத்தையும் அதிகார வர்கத்தையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கி  ஊரை அடித்து உலையில் போட்டு நாட்டிலேயே மிகப்பெரிய பணக்காரனாக வந்தால் நாட்டின்  மிக பெரிய விருது கிடைக்கும்  .....விபரமாக அறிவதற்கு reliancestarts.blogspot.com
'இந்த விருது தளர்வுறாத இந்திய தொழிலதிபர்களின் ஆன்மாவுக்கு, புதுமையை படைக்கும், உலகிலேயே சிறந்ததை செய்ய வேண்டும் என்ற லட்சியத்திற்கு அளிக்கப்படும் மரியாதை’ என்று அவர் கூறினார். > மேலும், ”இதனை மறு அர்ப்பணிப்பு செய்வதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறோம். அதேபோல், நவீன மற்றும் சுய சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான ஒன்றாக எடுத்துக் கொள்கிறோம்” என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: