செவ்வாய், 26 ஜனவரி, 2016

பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது...சமஸ்கிருதம் ..புதிய கல்வி கொள்கை.....ஆலோச்ச்சனா RSS..

பி ஜே பி யை தேர்ந்தெடுத்த கொடுமைக்கு தலையில் அடிச்சுக்கிறதை தவிர வேறு என்ன செய்வது என்று நினைக்கிறார்கள். அவர்கள் தான் பி ஜே பி யின் அனைத்து மக்கள விரோத செயல்களுக்கும் காவடி தூக்கி ஜால்ரா தட்டி வலிக்காத மாதிரியே நடிக்கிறார்கள், எவ்வளவு நாள்களுக்கு இது முடியும் தெரியவில்லை. சமச்சீர் கல்வி முறை என்றால் என்னவென்றே தெரியாமலே எதிர்த்த முட்டாள் கூட்டம் இது பற்றி என்ன சொல்லப் போகிறது? காலை ஏழரை முதல் மாலை ஏழரை வரை ஸ்கூலா? அப்போ காலை டிபன்? 6 மணிக்கேவா? வீட்டுப் பாடம் கிடையாதா? என்ன எழவுடா இது? நல்லகாலம் நம்ம பாசனக ஸ்கூல் முடிச்சாச்சு என்று தன்னலத்துடன் நினைத்துக் கொண்டு, ஊருக்கு, "ஆகா அற்ப்புதமான திட்டம், செயல்படுத்தனும், நல்லது" என்று அள்ளிவிடவேண்டியது தானே.
புதுடில்லி :புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:* காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்* வெளிநாட்டு மொழிகளுக்குபதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும்* சிறிய வயதில், மாணவர்கள், மிகவும் எளிதாக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். அதன்படி, தாய்மொழி, சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும்*
தற்போதைய, 6 மணி நேர பள்ளிநேரத்தில், இவற்றை கற்றுத் தர முடியாது. * வழக்கமான பாடத்துடன், மொழி, இசை, விளையாட்டு ஆகியவற்றையும் கற்றுத் தர வேண்டும். இந்த புதிய பாடத் திட்டத்தின்படி, 'ஹோம் ஒர்க்' இருக்காது. இது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வசதியாக இருக்கும்* இருபாலரும் ஒரே வகுப்பில் பயிலும், 'கோ - எஜுகேஷன்' முறை இருக்கக் கூடாதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: