சனி, 14 பிப்ரவரி, 2015

Tapsee: சினிமாவுக்கு வந்ததை எண்ணி வேதனைப்படுகிறேன்

ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் தான் எதிர்ப்பார்த்த வாய்ப்பு கிடைக்காமல் ஆந்திரா, கன்னடம் என்று இடம்பெயர்ந்தார். அங்கேயும் அவருக்கு எதிர்ப்பார்த்த வாய்ப்பு கிடைக்காமல், இரண்டாம் நாயகி உள்ளிட்ட வாய்ப்புகளே கிடைத்தது. சரியான வாய்ப்புகள் இன்றி தடுமாறும் டாப்ஸி, தனது சினிமா வாழ்க்கை குறித்து ரொம்பவே வேதனையுடன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது குறித்து பேட்டியில் கூறிய டாப்ஸி, “நான் அழகாக இருக்கிறேன். என்னிடம் நடிப்பு திறமையும் இருக்கிறது. ஆனாலும் படங்கள் இல்லை. இது எனக்கு வேதனையை தருகிறது. படித்துவிட்டு ஏதேனும் ஒரு பிசினஸ் செய்து தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். என் தலையெழுத்து நடிகையாகி விட்டேன்.
சினிமாவுக்கு வந்து தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கிறேன்.> நடிக்க வந்ததற்காக வருத்தமும் அடைகிறேன். மற்றவர்களை விட அழகும் திறமையும் இருந்தும் எனக்கு பட வாய்ப்புகள் வராதது ஏன் என்று புரியவில்லை.” என்று தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை: