திங்கள், 27 அக்டோபர், 2014

உலக அரங்கில் மோடியின் அபத்தங்கள் / உளறல்கள் ? ஒரு உலக வடிவேலு உதயமாகிறார்?

மோடித்துவம்ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உலகத்தைப் பற்றி நாம் பேசுகிறோம்; ஆனால், நாம்தான் மேலும் ஐக்கியப்பட்டு விட்டோமே? G-7, G-5, G20 என்று வித விதமான G-க்களின் கீழ் இந்தியாவும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் நாம் ஏன் G-ALL என்பதன் கீழ் ஏன் நாம் ஒன்று சேரக் கூடாது” மோடியிடம் இருந்து சுற்றுச்சூழல் குறித்து வந்து விழும் சில தெறிப்புகளைக் கேட்டு பிற நாட்டுத் தலைவர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்கின்றன இது மோடி சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. வளர்ந்த (Developed) நாடுகள், வளரும் நாடுகள் (Developing) என்றெல்லாம் இருப்பதற்கு பதில் ஒரேயடியாக எல்லா நாடுகளுக்குமான ஒரு தளம் வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மோடி. தப்பில்லை. ஆனால், அது தான் ஐக்கிய நாடுகள் சபை என்கிற பேரில் ஏற்கனவே ஒரு கந்தாயம் இருக்கிறதே என்று மண்டையைச் சொரிந்திருக்கிறார்கள் பிற நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும். மோடியிடம் இருந்து சுற்றுச்சூழல் குறித்து வந்து விழும் சில தெறிப்புகளைக் கேட்டு பிற நாட்டுத் தலைவர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்கின்றன. சில உதாரணங்களைப் பாருங்கள்:

”புவி வெப்பமயமாதல், அதனால் பருவநிலை மாற்றம்…. இப்படிச் சொல்வது சரிதானா? உண்மை என்னவென்றால், நம்ம கிராமத்தில் வயதானவர்கள் போகப் போக குளிர் அதிகம் என்கிறார்கள். உண்மையில், வயதாக ஆக அவர்களிடம்தான் குளிரைத் தாங்கிக் கொள்ளும் திறம் குறைந்திருக்கிறது. இது சூழல் மாற்றம் தானா, இல்லை நாம்தான் மாறியிருக்கிறோமா? என்கிற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்” – டோக்கியோவின் தூய இருதய பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டெம்பர் 2-ம் தேதி ஆற்றிய உரையில் இருந்து.

”பருவநிலை மாறவில்லை. நாம் தான் மாறிவிட்டோம். நதியை தாயாகவும், நிலாவை மாமாவாகவும், சூரியனை தாத்தாவாகவும் போற்றுவதை மறந்ததால்தான் பிரச்சனை” – செப்டெம்பர் 5-ம் தேதி குழந்தைகளோடு பேசும் போது தெறித்த தெறிப்பு இது.

“பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்கிற அவர்களது அழகுணர்ச்சி தான்” என்று சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்களை பீதியாக்கிய வரலாறு கொண்டவர் மோடி.
உலகெங்கும் வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் வரை சுற்றுச்சூழல் மாசடைந்து வருவது குறித்தும், அதையொட்டி உற்பத்தித் துறைத் தொழில்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது நமது ‘தல’ உலகத்தின் உச்சி மண்டையில் கடப்பாறையை சொருகுகிறார். ஒருபடி மேலே போய் யோகாசனம் செய்தால் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து உலகை காப்பாற்றலாம் என்று சமீபத்தில் சொல்லி விஞ்ஞானிகளை “ஙே” என்று விழிக்க விட்டுள்ளார்.
“பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்கிற அவர்களது அழகுணர்ச்சி தான்” என்று சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்களை பீதியாக்கிய வரலாறு கொண்டவர் மோடி. பூடானுக்குச் சென்றவர் அங்கே ஆற்றிய உரையில் அந்த நாட்டை நேபாள் என்று மூன்று முறை குறிப்பிட்டு புவியியல் விஞ்ஞானிகளை திகிலில் உறைய வைத்தார்.
கடந்தாண்டு அக்டோபரில் பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, தக்‌ஷசீலம் பீகாரில் இருந்ததாகவும், போரஸ் கங்கைக் கரையில் நடந்த போரில் தோல்வியுற்றதாகவும், மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தரை குப்த வம்சத்தைச் சேர்ந்தவராகவும் பேசி ஒரே நேரத்தில் வரலாற்று அறிஞர்களையும் சமூக ஆய்வாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
புஷ்-இசம்
“கவலைப்படாதே அமெரிக்கா….” “மனிதர்களும் மீன்களும் அமைதியாக சேர்ந்து வாழ முடியும்னு எனக்குத் தெரியும்”
இவற்றை வெறுமனே விவரப் பிழைகள் அல்லது மறதி என்று கடந்து செல்ல முடியாது. ஜார்ஜ் புஷ்ஷை நாம் அறிந்திருப்போம். உலக வரலாறே கண்டிராத மாபெரும் கோமாளி! அவரது கோமாளித்தனங்கள் புஷ்ஷிசம் என்ற பெயரில் இணையத்தில் மிகப் பிரபலம். ஆனால், கோமாளி புஷ்ஷின் தனிப்பட்ட செயல்பாடுகள் நகைப்புக்குரியதாக இருந்த அதே சமயத்தில் அமெரிக்க அதிபர் எனும் வகையில் அவர் முன்னெடுத்த அரசியல் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களை சொல்லொணாத் துயருக்கு உள்ளாக்கின.
அன்று புஷ் துவங்கி வைத்த நிகழ்வுகளின் தொடர்ச்சி தான் இன்றும் உலகெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகமேலாதிக்க திட்டத்தின் மிகக் கேந்திரமான செயல்பாடுகளைத் துவக்கி வைத்த பாசிஸ்ட் என்கிற கோணத்தில் அல்லாமல், உள்நாட்டு அமெரிக்கர்கள் அவரது கோமாளித்தனங்களை கேலி செய்வதில் திளைத்துக் கிடந்தனர். அவரது புவியியல் முட்டாள்தனம், பொருளாதார கோட்பாடுகள் குறித்த அறியாமை பற்றி அமெரிக்க முதலாளித்துவ ஊடகங்கள் கேலி கிண்டல்களை அவ்வப்போது வெளியிட, சாமானிய அமெரிக்கர்கள் இணையத்தில் அவற்றை மேலும் மெருகேற்றி பலவாறான நகைச்சுவைத் துணுக்குகளை உற்பத்தி செய்து திருப்திப்பட்டுக் கொண்டனர்.
மோடித்துவம்
மோடியோ, ஜார்ஜ் புஷ்ஷோ கோமாளிகளாக இருப்பதில் வியப்பில்லை.
தற்போது மோடியின் தேர்தல் கால உத்திரவாதங்களும், அவர் மேல் மக்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளும் தகர்ந்து வரும் நேரம். மெல்ல முதலாளித்துவ ஊடகங்கள் அவரது உளறல்கள் மெல்லிய நகைச்சுவையாக முன்வைத்து கிச்சுகிச்சு மூட்டத் துவங்கியுள்ளன. இணையவாசிகள் மோடித்துவா என்ற பெயரில் கிண்டலடித்து சுயமகிழ்ச்சியில் திளைக்கத் துவங்கியுள்ளனர்.
மோடியோ, ஜார்ஜ் புஷ்ஷோ கோமாளிகளாக இருப்பதில் வியப்பில்லை. பாசிஸ்டுகள் எப்போதும் உள்ளுக்குள் கோழைகளாகவும் கோமாளிகளாகவுமே இருப்பார்கள் – விதிவிலக்கின்றி. எனினும் அவர்களது முட்டாள்தனங்களை பகடி செய்யும் அதே நேரம் அவர்களிடமிருந்து வெளிப்படும் கேனத்தனமான கருத்துக்களின் அடிப்படை எங்கே இருக்கிறது என்பதையும், அதன் பொருளாதாய விளைவுகள் (Material effect) என்னவென்பதையும் புரிந்து கொள்ளவது அவசியம்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிவைக் குறித்து தனது ’கர்மயோகம்’ என்ற நூலில் இவ்வாறாகச் சொல்கிறார் மோடி –
moditva-8”நான் அவர்கள் தங்களது வருமானத்திற்காக இந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதை நம்பவில்லை. அப்படியிருந்தால் இது போன்ற வேலையை தலைமுறை தலைமுறையாக அவர்கள் செய்யமாட்டார்கள். ஏதோவொரு சந்தர்பத்தில் யாரோ ஒருவருக்கு அது (மலமள்ளுவது) ஒட்டுமொத்த சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும் கடவுளுக்காகவும் தாங்கள் செய்ய வேண்டிய கடமை என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். இது கடவுளால் தமக்கு அளிக்கப்பட்ட வேலை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மலமள்ளும் வேலை என்பது உள்ளார்ந்த ஆன்மீக அனுபவம் என்பதை உணர்ந்தே அவர்கள் நூற்றாண்டுகளாக செய்து வருகிறார்கள். இது தலைமுறை தலைமுறையாக இவ்வாறே தொடர்ந்திருக்க வேண்டும்…”
இது வெறும் கோமாளித்தனமல்ல. சமூகத்தின் கீழ் அடுக்கில் அழுத்தப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இழிந்த காரியங்கள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தின் மேல் பார்ப்பனிய இந்துப் பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் வன்மத்திலிருந்தே இப்படி ஒரு கருத்து உதிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ் கோரும் இந்து ஒற்றுமை என்பதன் திருத்தமான விளக்கம் இது – அந்தந்த வர்ணத்தவர்கள் தங்களுக்கு ‘விதிக்கப்பட்ட’ கடமைகளை ஆற்றுவதன் மூலம் வீடுபேறை அடைய முடியும் என்பதுதான் பார்ப்பன இந்துமதம் போதிக்கிறது. இந்த தத்துவத்தின் நடைமுறை அர்த்தம் பார்ப்பான் மணியாட்டுவதும் தலித்துகள் பீயள்ளுவதும் தான்.
காலமாற்றத்திற்கு உட்பட்டு பார்ப்பனியம் தனது படிநிலைச் சாதி ஒடுக்குமுறையை முன்பைப் போல் அதே விகாரமான வடிவத்தில் முன் தள்ளுவதில்லை. சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும் சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும் போட்டு சூத்திரனைக் கீழே உட்காரச் சொல்லாமல் சொல்லி “நாசூக்காக” நடந்து கொள்ளும் சங்கர மடத்தைப் போல பார்ப்பனிய மேலாதிக்கம் நாசூக்கான முறையில் தான் தற்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது.
சு.சாமி - ஜெயேந்திரன்
சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும்
பொன்னார் - ஜெயேந்திரன்
சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும்
சங்கராச்சாரியே மௌனக் குசு விடும் காலத்தில் இத்தனைப் பட்டவர்த்தனமான வார்த்தைகளில் நாறடிக்கும் மோடியின் வார்த்தைகளை வெறும் கிறுக்குத்தனமான  உளரல்கள் என்று நாம் நகைக்க முடியுமா?
மோடித்துவம்
பாசிஸ்டுகள் கோமாளிகள் மட்டுமல்ல, கொலைகாரர்களும் கூடத்தான்.
பாசிஸ்டுகள் கோமாளிகள் மட்டுமல்ல, கொலைகாரர்களும் கூடத்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களது கோமாளித்தனத்தின் சமூகபாத்திரமல்ல; கொலைகாரத்தனத்தின் சமூகபாத்திரமே நமது அக்கறைக்கும் கவலைக்கும் உரியது. தற்போது மோடியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாயைகள் ஒவ்வொன்றாக அகலத் துவங்கியுள்ளன. இந்தத் தருணத்தில் அவரைச் சுற்றி அவ்வாறான மாயைகளைப் பின்ன கைக்கருவிகளாகச் செயல்பட்ட முதலாளித்துவ ஊடகங்கள் மெல்ல மெல்ல, மோடியின் உண்மையான முகத்தை நகைப்புக்குரிய ஒன்றாக சித்தரிக்க முயன்று வருகின்றன.
நாம் விழிப்போடிருந்து அந்த முகத்தின் உண்மையான பண்பான கொலைகாரத்துவத்தை இனங்கண்டு கொள்வதோடு அம்பலப்படுத்தவும், எதிர்த்து முறியடிக்கவும் முன்வர வேண்டும்.
-    தமிழரசன்.வினவு.com 

கருத்துகள் இல்லை: