புதன், 29 அக்டோபர், 2014

கருப்புபண இந்தியர்களின் பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுப்பு! அப்படி போடு?

டெல்லி, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து கருப்புப் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு கைபற்றியது. இந்த பட்டியலை  இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்டியல் குறித்து கூறிய உச்ச நீதிமன்றம், சீலிடப்பட்ட பெயர் பட்டியலில் உள்ள விவரங்களை வெளியிட முடியாது என்றும், சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மட்டுமே உறைகளை பிரித்து விவரங்களை பார்க்க முடியும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மேலும், கருப்புப் பண விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர், நவம்பர் மாதத்துக்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை: