சனி, 17 மே, 2014

பத்ரி :மோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்.?

முதலில் இவரை பாஜகவின் பிற தலைவர்களே வரவிடாமல் செய்துவிடுவார்கள் என்றார்கள். நடக்கவில்லை.
தேசிய ஜனநாயக முன்னணியின் பிற கட்சிகள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்கள். நிதீஷ் குமார் விலகவும் செய்தார். ஆனால் இறுதியில் ஓரளவுக்கு நல்ல கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில்கூட ஒரு கூட்டணி உருவானது.
கட்டாயமாக தே.ஜ.முன்னணிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்றார்கள். (நானும்கூட கொஞ்சம் குறைவாகக் கிடைக்கும், ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப்பின் பிற கட்சிகள் வந்து சேர்ந்துகொள்ளும் என்றுதான் நினைத்திருந்தேன்.) தேவையே இல்லை என்றானது.
பாஜகவுக்கே 272+ கிடைத்தது! பத்ரியின் மகிழ்ச்சிக்கான காரணம் புரிகிறது . அம்பேத்காரும் பெரியாரும் அவ்வளவு சுலபத்தில் மறக்கடிக்க படமுடியாதவர்கள் !இன்னும் பல மோடிகள் வந்தாலும் நீங்கள் நினைப்பது நடக்காது ?
மோதி ஊதிப் பெருக்கிய வெறும் பலூன் என்றார்கள். கருத்துக்கணிப்புகள் பொய் என்றார்கள். கார்ப்பரேட் சதி என்றார்கள். அனைத்தையும் மோதி உடைத்தெறிந்திருக்கிறார்.

மோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்.

1. உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ஒவ்வொரு தடையையும் உடைத்துக்கொண்டு மோதி முன்னுக்கு வந்தார். எதிர்த்த அத்வானி, சுஷ்மா போன்றவர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னுக்கு வந்தார். பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தன்னை ஏற்றுக்கொள்ள வைத்தார். அதன் பின்னரே பிரசாரத்தில் இறங்கினார்.

2. இந்தியா இதுவரை கண்டிராத மாபெரும் தேர்தல் பிரசாரத்தை முன்வைத்தார். அதன் பின்னான உழைப்பு அபாரமானது. ஒரு பக்கம் பொதுக்கூட்டங்கள். இன்னொரு பக்கம் இணையம் வழியாக அவற்றின் நேரலை ஒளிப்பதிவு. இதில் அவர் தொலைக்காட்சி நிலையங்களை முற்றிலுமாகத் தேவையற்றவையாக ஆக்கினார். ஆனால், இவருடைய பேச்சுகளைக் காண்பிப்பதால் தங்கள் ரேட்டிங் உயர்கிறது என்பதால் தொலைக்காட்சிகளே இவருடைய பேச்சுகளைக் காண்பிக்கத் தொடங்கின. இவரைப் படுமோசமாகத் தாக்கிய தொலைக்காட்சிகளே வரிசையில் நின்று இவரைப் பேட்டி காண விரும்பின.

3. பொதுமக்களுடன் உணர்வுபூர்வமான ஓர் இணைப்பைக் கொண்டுவந்தார். எனக்கு இவருடைய உரைகள் போதுமானவையாகத் தோன்றவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்பதை இவர் இன்னமும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் அவர் மிக எளிய மக்களிடம் நேரடியாகப் பேச அதெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்தார் போலும். அவருடைய உத்திதான் இறுதியில் வென்றது.
4. உத்தரப் பிரதேசத்தில் மிகச் சிறப்பான தேர்தல் பணியின்மூலம் 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார். இது ஒன்றுதான் பாஜகவை 272+ என்ற எண்ணிக்கைக்குக் கொண்டுபோனது.
5. இனி கூட்டணி ஆட்சிதான் என்று குதூகலித்த அனைவரையும் முற்றிலுமாகத் தோற்கடித்திருக்கிறார்.
6. காங்கிரஸ் இனி மீண்டுவருவது மிகக் கடினம் என்று ஆக்கியிருக்கிறார். காங்கிரஸின் ஐடியாலஜி என்ன? ஒரு குடும்ப ஆட்சி என்பது இனியும் சாத்தியமா? இதுபோன்ற கேள்விகளையெல்லாம் கேட்கவைத்திருக்கிறார்.

7. இறுதியாக பிரசாரத்தின் முக்கியமான புள்ளி வளர்ச்சியே என்பதன்மூலம் தேசியக் கதையாடலை மாற்றியிருக்கிறார். வளர்ச்சி என்றால் என்ன என்பதில் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இனி வளர்ச்சி ஒன்றை மட்டும்தான் அனைத்துக் கட்சிகளும் பேசமுடியும் என்று ஆக்கியிருக்கிறார்.

பேச்சுகள் முடிந்துவிட்டன. இனி செயல்.

கருத்துகள் இல்லை: