புதன், 14 மே, 2014

காங்கிரஸ் மதசார்பற்ற ஆட்சி குறித்து இதர கட்சிகளுடன் பேச்சு !

லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக
கூட்டணிக்கு, 220 இடங்களுக்கும் குறைவாக கிடைத்தால், அந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. 'பி' பிளான் என்ற பெயரில், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட, முக்கிய தலைவர்களுடன், காங்., தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கருத்து கணிப்பு முடிவு;லோக்சபா தேர்தல் முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகவுள்ளன. ஆனாலும், 'எக்சிட் போல்' என, அழைக்கப்படும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.அவற்றில், 'பா.ஜ., தலைமையிலான தே,ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 'இறுதி முடிவுகள் வெளிவரட்டும்' என, முக்கிய அரசியல் கட்சிகள், மவுனம் சாதிக்கின்றன. இந்நிலையில், டில்லியில், காங்கிரஸ் தலைவர்கள், நேற்று காலையில் இருந்தே, முக்கிய ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர்.
<>இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:
நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைய விடாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளில், தே.ஜ., கூட்டணிக்கு, 220க்கும் குறைவான இடங்கள் கிடைத்தால், அந்த கூட்டணியை, ஆட்சியமைக்க விடாமல் தடுப்பது என, இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, 'பிளான் - பி' என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முக்கியமான மாநில கட்சிகளை காங்கிரஸ் தலைமையில் திரட்டி, புதிய ஆட்சி அமைக்க முயற்சிப்பதே, இந்த திட்டத்தின் நோக்கம் பொறுப்பு ஒப்படைப்பு லோக்சபா தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, மம்தா பானர்ஜியுடன், தொலைபேசியில் பேசினார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதியுடனும், சோனியா பேசி வருகிறார்.இவர்கள் தவிர, கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகளின் தலைவர்கள் என கருதப்படும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்ற தலைவர்களை வளைக்கும் பொறுப்பை, கூட்டணி கட்சி தலைவர் ஒருவரிடம், காங்., மேலிடம் ஒப்படைத்துள்ளது.
அ.தி.மு.க.,வை நெருங்கும் காங்கிரஸ்?*(ம்ம் பேரம் படியனுமே ?)  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், 'தமிழகத்தில், அ.தி.மு.க.,வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்., கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, தமிழகத்தை சேர்ந்த காங்., தலைவர்கள் சிலர் கூறியதாவது:இத்தனை காலமும், தி.மு.க.,வுடன் இருந்ததால் தான், அ.தி.மு.க., எங்களை நெருங்காமல் இருந்தது; இனி, அப்படி இருக்காது. தேர்தலில், அ.தி.மு.க., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மத்தியில் பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், சிக்கல் தான். அ.தி.மு.க., எதிர்க்கட்சி வரிசையில் தான், அமர வேண்டும். இதனால், அ.தி.மு.க., எங்களுடன் இணக்கமாக செயல்படும் என, நம்புகிறோம். இந்த இணக்கம், 2016ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும். இனி, தமிழக சட்டசபையிலும் காங்கிரசின் நிலையில் மாற்றம் இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது டில்லி நிருபர் - dinamalar.com 

கருத்துகள் இல்லை: