வியாழன், 25 ஏப்ரல், 2013

ப.சிதம்பரம்: தம்பி என்று அழைத்தேன் ! நல்ல புத்திமதிகளை சொன்னேன்

இரவு 11 மணியிருக்கும் நானே காரை ஒட்டி சென்று 150 தூரம் முன்பாக நிறுத்தி விட்டு நடந்து சென்று மாடிப்படியேறி அங்கு ஒரு அறையில் இருந்த பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் சந்தித்தேன் , தம்பி என்று வாஞ்சையோடு அழைத்து எவ்வளவோ நல்ல புத்திமதிகளை சொன்னேன் எதையுமே அவர்கள் கேட்கவில்லை நாம் ஏற்படுத்தி கொடுத்த நல்ல வாய்ப்புக்களை எல்லாம் போட்டு உடைத்தார்கள் பின்பு நம்தேசத்தின் மாணிக்கத்தை இதே தமிழ் மண்ணில் இழந்தோம் அதுவும் சென்னைக்கு அருகிலேயே . அவை எல்லாம் யாரால் என்று எல்லோருக்கும் தெரியும் ஈழத்தமிழருக்கு காங்கிரஸ் அளவு வேறு யாரும் நன்மை செய்யவில்லை என்பதை மட்டும் தற்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்

கருத்துகள் இல்லை: