
தனது 26வது பிறந்த நாளில் லுவாண்டாவில் இருந்து வந்த விமானத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த மட்டாடா, இந்த விமானம் லண்டனில் தரையிறங்கும் நிலையில், விமானத்தில் அடிப்பாகத்திலிருந்து தவறி விழுந்துவிட்டார்.
அவரது சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி சிம் கார்டு ஒன்றின் மூலம் , அவர் ஐரோப்பாவில் ஒரு நல்ல வாழ்க்கை வாழ விரும்புவதாகக் குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
அவர் தரையில் விழும் நேரத்தில் அவர் கடும் குளிரினாலோ அல்லது பிராண வாயு பற்றாக்குறையாலோ, இறந்திருக்கலாம் அல்லது, இறக்கும் நிலைக்கு வந்திருகலாம் என்று மருத்துவர் ஒருவர் விசாரணையில் கூறினார்.
இது ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணமாக மரண விசாரணை அதிகாரியால் முடிவு செய்யப்பட்டுள்ளது. bbc.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக