
According to police, the accused, identified as Firoz Khan (35) who works in a private power சியோனி, (ம.பி.,):டில்லியில், ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்திலும், ஐந்து வயது சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருக்கிறாள்.சியோனி மாவட்டம், கான்சோர் நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த, 17ம் தேதி சிறுமிக்கு, சாக்லேட் கொடுத்து, தனியாக அழைத்துச் சென்ற, பிரோஸ்கான் என்ற, 35 வயது நபர், அவளை பலாத்காரம் செய்துள்ளான். உணர்வற்ற நிலையில், பண்ணை ஒன்றில் கிடந்த சிறுமியை, அவள் பெற்றோர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் நிலை, கவலைக்கிடமாக உள்ளது.சிறுமியை பலாத்காரம் செய்த, பிரோஸ்கானை, கைது செய்யக் கோரி, நேற்று கான்சோர் நகரில், "பந்த்' அனுசரிக்கப்பட்டது. இருந்தாலும், இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக