
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பிரதமர் ஆஜராக வேண்டும் என்று யஷ்வந்த சின்ஹா ஏற்கனவே 2 முறை கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை பிரதமர் நிராகரித்து விட்டார். இதனையடுத்து 3வது முறையாக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராக வேண்டும் என அவர் கடிதம் எழுதியுள்ளார். நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள கூட்டுக் குழு அறிக்கையை வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக