செவ்வாய், 19 மார்ச், 2013

செல்வராகவனின் இரணடா‌ம் உலகம் படம் எப்போது வெளிவரும்?

நடிகர்களை அடித்து உதைத்து செதுக்கும் ஆனானப்பட்ட பாலாவே தொண்ணூறு நாட்களில் பரதேசியை முடித்து திரைக்கு கொண்டு வந்துவிட்டார். செல்வராகவன் என்ன செய்கிறார்? இன்டஸ்ட்‌ரியில் இயல்பாக எழுந்துள்ள கேள்வி இது. அனுஷ்கா, ஆர்யா நடித்திருக்கும் இரண்டாம் உலகம் வழக்கமான கதை அல்ல. பழங்குடியினரைப் பற்றி படத்தில் வருகிறதாம். ஆர்யாவும், அனுஷ்காவும் ஆதிபழங்குடிகளாக நடித்துள்ளதாகவும், அந்தக் காட்சிகளைதான் ஜா‌ர்‌ஜியாவில் எடுத்தனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. என்றாலும் ஹா‌ரிஸ்தான் லேட்டாம்.இந்த தாமதம் காரணமாக ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் இன்னும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில்தான் கடைசிப் பாடலை தனுஷை பாட வைத்து ஒலிப்பதிவு செய்தனர்.டாக்கிப் போர்ஷன் எனப்படும் வசனக் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. சி‌ஜி வேலைகள் அதிகளவில் உள்ளதாகவும் தகவல்.கூட்டிக்கழித்தால் கோடையில் படம் வெளியாக அரை சதவீத வாய்ப்பும் இல்லை. ஆகஸ்டில் ஒருவேளை வெளியாகலாம் என்பதே படயூனிட்டின் கருத்தாக உள்ளது.tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: