செவ்வாய், 19 மார்ச், 2013

ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நாய்

சென்னிமலை : ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கே.ஜி. வலசு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (எ) பாஷா. விவசாயி. இவர் வளர்த்து வந்த ஆடு, கடந்த 7 நாட்களுக்கு முன்பு இரண்டு குட்டிகளை ஈன்றது. இதே போல் அவரது வளர்ப்பு நாய் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மூன்று குட்டிகளை ஈன்றது. ந்த நாய் குட்டி போடும் முன்னர், துள்ளி குதித்தபடி ஆட்டு குட்டிகள் அருகில் வந்தால் விரட்டியது. ஆனால் நாய் குட்டி போட்ட பிறகு, தனது குட்டிகளுக்கு பாலூட்டி அரவணைத்ததோடு ஆட்டு குட்டிகள் மீதும் தாய்ப்பாசத்தைப் பொழிந்தது. அந்த ஆட்டு குட்டிகளுக்கும் நாய் பால் கொடுக்கிறது. நாயிடம் சென்று ஆட்டு குட்டிகள் அடிக்கடி பால் குடிப்பதை அப்பகுதி மக்கள் வினோதமாக பார்த்துச் செல்கின்றனர். பலரும் இந்த காட்சியை செல்போன் கேமராக்களில் படம் பிடித்துச் செல்கின்றனர்dinakaran.com

கருத்துகள் இல்லை: