சனி, 6 அக்டோபர், 2012

ராமதாஸ்: 110 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்போம் Todays Joke

உளுந்தூர்பேட்டை :வருகிற சட்டமன்ற தேர்தலில் 110 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிகூண்டு திடலில் நேற்று இரவு பாமக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் 7 கோடி மக்களில் இரண்டரை கோடி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஏர் ஓட்டி விவசாயம் செய்து வரும் மக்களுக்கு பிச்சை போடுவது போல் இலவசமாக அரிசி போடுகிறார்கள். தமிழகத்தில் எப்போது மின்சாரம் வரும், போவும் என கடவுளுக்கே தெரியாது. ஆடு, மாடுகளுடன் வாழ்ந்து வரும் எங்கள் இன மக்களுக்கு எதற்காக ஆடு, மாடுகளை வழங்குகிறீர்கள். விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கினால் எந்த இலவச பொருளும், யாரும் தரதேவை இல்லை. வருகிற எந்த தேர்தல் ஆனாலும் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளிடம் சத்தியமாக கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் பாமக ஜெயிக்கும். அதில் 110 தொகுதிகளில் பாமக படுத்துக்கொண்டே ஜெயிப்போம். பாமக ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்றுவோம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கருத்துகள் இல்லை: