வியாழன், 16 ஆகஸ்ட், 2012

பள்ளியின் அலட்சியத்துக்கு மகன் பலியாகிவிட்டானே.. - சினிமா இயக்குநர் கண்ணீர்

Carelessness The School Killed My Child

"குழந்தையை பயிற்சிக்கு கூட்டிச் சென்றவர்கள், அவன் மூழ்கிவிட்டது கூட தெரியாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். அந்த அலட்சியம் என் மகனின் உயிரைப் பறித்துவிட்டது. இவர்களின் அலட்சியத்துக்கு என் மகனைப் பறிகொடுத்து நிற்கிறேன்..." என்று கதறினார் ரஞ்சனின் தந்தை மனோகர்.
பள்ளி நீச்சல் குளத்தில் ரஞ்சன் உள்ளிட்ட 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராஜசேகர் என்ற ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே பயிற்சி அளித்துள்ளார். 15 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர், 2 கண்காணிப்பாளர்கள் உதவியுடன் பயிற்சியளிக்க வேண்டிய இடத்தில் ஒரே ஓரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார். போதிய அளவில் பயற்சியாளர்கள் இல்லாததே விபத்துக்கு காரணம் என புகார் கூறும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: பள்ளியின் அலட்சியப் போக்கால் என் மகன் அநியாயமாக இறந்துவிட்டான், என்று திரைப்பட இயக்குநர் மனோகர் கண்ணீர் விட்டு கதறினார்.
கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான மாணவன் ரஞ்சன், பிரபல இயக்குநர் மனோகரின் மகன் ஆவார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மாசிலாமணி மற்றும் வேலூர் மாவட்டம் படங்களை இயக்கியவர் மனோகர். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகளைத்தான் நாடுகிறார்கள். அந்த வகையில் பெரிய சிபாரிசிக்கிடையில் தன் மகனை இந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் மனோகர்.
நீச்சல் பயிற்சியும் இங்கேயே தரப்படுவதால் மகனை அதில் சேர்த்துவிட்டிருக்கிறார்.
காலையில் பள்ளியில் மகனை விட்டுவிட்டு வந்த அடுத்த சில மணி நேரங்களில் அவன் நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளனர். பதறியடித்துக் கொண்டு வந்து பார்த்தபோது, ரஞ்சன் மூச்சுப்பேச்சின்றி கிடந்திருக்கிறான். உடனே பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் காட்டியுள்ளனர். சிறுவன் ரொம்ப நேரத்துக்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அலட்சியம்...
"குழந்தையை பயிற்சிக்கு கூட்டிச் சென்றவர்கள், அவன் மூழ்கிவிட்டது கூட தெரியாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். அந்த அலட்சியம் என் மகனின் உயிரைப் பறித்துவிட்டது. இவர்களின் அலட்சியத்துக்கு என் மகனைப் பறிகொடுத்து நிற்கிறேன்..." என்று கதறினார் ரஞ்சனின் தந்தை மனோகர்.
பள்ளி நீச்சல் குளத்தில் ரஞ்சன் உள்ளிட்ட 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராஜசேகர் என்ற ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே பயிற்சி அளித்துள்ளார். 15 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர், 2 கண்காணிப்பாளர்கள் உதவியுடன் பயிற்சியளிக்க வேண்டிய இடத்தில் ஒரே ஓரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார். போதிய அளவில் பயற்சியாளர்கள் இல்லாததே விபத்துக்கு காரணம் என புகார் கூறும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரிய இடத்தில் செல்வாக்குள்ளவர்கள் இந்தப் பள்ளியை நடத்துபவர்களாக இருப்பதால், விசாரணை எப்படி நடக்கும் என்பதில் அவநம்பிக்கை தெரிவித்தனர் மனோகருக்கு ஆதரவாக வந்த மற்ற பெற்றோர்கள். அதற்கேற்ப இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யக்கூட இல்லை.
இந்த அவநம்பிக்கையைப் போக்குவது மாநகர போலீசின் கடமை...

கருத்துகள் இல்லை: