ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஹாஸ்டலில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை

புதுக்கோட்டை அருகே விடுதி அறையில் தூக்கு போட்டு நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வாணக் கன்காடு கிராமத்தில் வசிக்கும் சுப்புராமனின் மகள் கார்த்திகா(19). புதுக்கோட்டை சத்திய மங்கலம் அருகில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி முதலா மாண்டு படித்து வந்தார்.
நேற்று நீண்ட நேரம் ஆகியும் கார்த்திகா தங்கியிருந்த அறை திறக் கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த வார்டன் அறையை திறந்து பார்த்தார்.
அப்போது கார்த்திகா தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக் குப்பதிந்து கார்த்திகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை: