சனி, 25 ஜூன், 2011

விரதமிருந்த நயன்தாரா!பிரபுதேவாவைச் சந்திக்காமல்

தெலுங்கில் ஸ்ரீ ராமராஜ்யம் என்று ஒரு படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பி அடங்கியதும் தெரிந்த விஷயம்.

தெரியாதது, சீதையாக நடிக்கும் நயன்தாரா கடும் விரதமிருந்த சமாச்சாரம்!

படப்பிடிப்பு முடியும் வரை நயனதாரா அசைவ உணவையே தொடவில்லையாம். அதுவும் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே எடுத்துக் கொண்டாராம்.

அதைவிட முக்கியம், இடையில் பிரபுதேவாவைச் சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.

சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. எந்த நிகழ்ச்சிக்கும் போவதுமில்லையாம்.

இந்தப் படம்தான் நயன்தாரா கைவசமுள்ள கடைசிபடம். அதன் பிறகு சினிமாவுக்கு குட்பைதானாம்!

English summary
Nayanthara is on Vrath during the entire shoot of Telugu film Sri Rama Rajyam in which she plays Sita. The buzz is that she is not meeting Prabhu Deva during her shoots in Hyderabad!

கருத்துகள் இல்லை: