சனி, 25 ஜூன், 2011

தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்ட புலிகள் தமிழர்களையே அழித்தனர்


இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போருக்கு வேறு தவறான அர்த்ததை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வாசிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு கரோலினா பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இலங்கை மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருபவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.
விடுதலைப் புலி தீவிரவாதத்திற்கு எதிராக போராடி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று சாதனையுடன் இலங்கையில் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடுவதாகக் கூறியபோதும் அவர்களது செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் முன்னெற்றத்தை ஏற்படுத்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ள போதும் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு வேறு விதத்தில் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: