வெள்ளி, 26 நவம்பர், 2010

நடிகர் சத்யராஜ்,நடிகை ரோகிணி பங்கேற்ற நடைபயணம்


பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற நடைபயணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆண்டுதோறும் நவம்பர் 25ம் தேதி பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று ஐநா அறிவித்தது.
 
இதையொட்டி சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து களங்கரை விளக்கம் வரை நடைபயணம் நடைபெற்றது.

இதில் நடிகர் சத்யராஜ், நடிகை ரோகிணி பங்கேற்றனர்.  

நடிகை ரோகிணி,   ’’ஒரு நாளு சுவற்றுக்குள் நடக்கும்போது எந்த அளவிற்கு பெண் அபலையாக இருப்பாள் என்று உணர்ந்திருக்கிறேன். 

பெண்களுக்கு மன தைரியம் வேண்டும்.   வெளியே வந்து உங்கள் குடும்பத்தை பற்றியோ, எங்களுக்கு எதிராக  நடக்கும் பிரச்சனைகள் பற்றி சொல்வதால் எந்த குடியும் கெட்டுப்போகாது’’என்று தெரிவித்தார்.

இந்த நடைபயணத்தின் பேது பெண்களுக்கு எதிரான வரதட்சணை, பாலியல்கொடுமைகள், பெண் சிசு கொலைகள் மற்றும் பெண் சிசு குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: